புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான உள்ளீடுகள்" என்ற தலைப்பில் கடந்த  ஜூன் மாதம் தனது இணையதளத்தில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.



இந்த புதிய கல்விமுறை தாய்வழிக்கல்வியை பாதிக்கும் என்றும், சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதாகவும் கூறி புரட்சிகர மாணவர் முன்னணியினர், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட மொத்தம் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் பேசியதாவது:- 

சமஸ்கிருத மொழியை வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை படிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தாய் மொழி தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது. "எங்களுக்கு தாய் மொழிக் கல்வியே போதும்" இக்கல்வி முறை எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தாய் மொழிக்கல்வியே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...