புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான உள்ளீடுகள்" என்ற தலைப்பில் கடந்த  ஜூன் மாதம் தனது இணையதளத்தில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.



இந்த புதிய கல்விமுறை தாய்வழிக்கல்வியை பாதிக்கும் என்றும், சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதாகவும் கூறி புரட்சிகர மாணவர் முன்னணியினர், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட மொத்தம் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் பேசியதாவது:- 

சமஸ்கிருத மொழியை வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை படிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தாய் மொழி தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது. "எங்களுக்கு தாய் மொழிக் கல்வியே போதும்" இக்கல்வி முறை எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தாய் மொழிக்கல்வியே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...