சசிக்குமார் கொலைவழக்கில் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பம்


கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு சிபிசிஜடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.

கோவை சுப்பிரமணியபாளையம் பகுதியில் கடந்த 22ம் தேதியன்று இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்திதொடர்பாளர் சசிக்குமார், அவரது வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலைசெய்யப்பட்டார். இதனை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு வன்முறைசம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொலைதொடர்பாக துடியலூர் காவல் துறையினர்வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே திருச்சி சரக டிஜஜி அருண், கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ரம்யபாரதி உள்ளிட்டோர் தலைமையில் 8 தனிப்படைகள்அமைக்கப்பட்டு, மர்மநபர்களை தேடி வந்தனர். முன்பகை காரணமாக கொலை நடந்ததா அல்லது மதரீதியான பிரச்சணையில் கொலை நடந்ததா அல்லது வேறு எதேனும் காரணத்தினால் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற நாளான்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுஇருந்த கண்காணிப்பு கேமராக்களில்பதிவான காட்சிகள் மற்றும் சசிகுமாரின்கைப்பேசி அழைப்புகளை கொண்டும்விசாரணை நடத்தி வந்தனர். 

எனினும்தனிப்படை விசாரணையில் எந்த ஒருமுன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து, இந்தகொலை வழக்கை சிபிசிஜடிக்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஜடி ஏடிஜிபி கரண்சின்கா சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் சம்பவம்நடைபெற்ற துடியலூர் பகுதிக்கு சென்ற அவர்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் துடியலூர் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், வழக்குவிசாரணை குறித்த தகவல்களையும், வழக்கின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம்கேட்டறிந்தார். சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணையில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...