கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாயம்

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த  கணேசன், செல்வி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா (15). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் செல்வபுரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை  ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...