கோவையைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாயம்

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த  கணேசன், செல்வி ஆகியோரின் மகள் ஐஸ்வர்யா (15). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு சென்ற ஐஸ்வர்யா வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ஐஸ்வர்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் செல்வபுரம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

இதேபோல்,
கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவரது மகள் சபீதா (19). இவர் சி.எம்.எஸ். கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு பி.காம். படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை  ரமேஷ் பீளமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...