பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட இருவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவையில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது பன்றிக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், முருகன் (50) என்பவரும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அதில் 19 வயது இளம்பெண் காய்ச்சல் சரி ஆகி வீடு திரும்பினார். ஆனால், முருகன் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த தகவல் மருத்துவமனை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டது.

அதேபோல, கூடலூரில் வட்டாட்சியராக இருந்த ரகுமான் என்பவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், பன்றிகாய்ச்சல் பாதிப்பில் நேற்று கரூரைச் சேர்ந்த (அசோக்குமார்) 69 வயதான முதியவரையும் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 2 வயது குழந்தையையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இவர்களுக்கு தனிமை சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அதேபோல, சாதாரண வைரஸ் காய்ச்சல் தொற்றியும் 19 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...