கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த சில மாதங்களாக அதன் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது பன்றிக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், முருகன் (50) என்பவரும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அதில் 19 வயது இளம்பெண் காய்ச்சல் சரி ஆகி வீடு திரும்பினார். ஆனால், முருகன் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த தகவல் மருத்துவமனை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டது.
அதேபோல, கூடலூரில் வட்டாட்சியராக இருந்த ரகுமான் என்பவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில், பன்றிகாய்ச்சல் பாதிப்பில் நேற்று கரூரைச் சேர்ந்த (அசோக்குமார்) 69 வயதான முதியவரையும் மற்றும் ஈரோட்டை சேர்ந்த 2 வயது குழந்தையையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இவர்களுக்கு தனிமை சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. அதேபோல, சாதாரண வைரஸ் காய்ச்சல் தொற்றியும் 19 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.