கோவை : இயற்கைக் கல்வியை மேம்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர்களின் கற்சிற்பங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கோவை : இயற்கைக் கல்வியை மேம்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர்களின் கற்சிற்பங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் இயற்கை கல்வியை மேம்படுத்துவதற்காக கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிங்காநல்லூர் குளக்கரையில் கற்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, பல்லுயிர்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குளங்களைச் சுற்றிலும், மலர்கள் மற்றும் வனவிலங்குகளின் சிற்பங்களும் உண்மை தோற்றத்தைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் வனவிலங்குகளின் உடல் அமைப்புகளை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், 10 கற்சித்திரங்கள் மற்றும் 2 சிற்பங்களை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் மற்றும் சலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சார்பில் கே. சங்கர் ஆகியோர் இந்த சிற்பங்களை திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.
இது குறித்து குயிப் அமைப்பின் இயற்கை கல்வி அலுவலர் எஸ். வருண் கூறுகையில்,"தமிழத்தின் இயற்கை சின்னங்களான மாநிலம் மரம் (பனை), மாநில பறவை (மரகதப்புறா) மற்றும் மாநில விலங்கு (வரையாடு) ஆகியவற்றையின் வரலாற்றையும் போக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்சிற்பங்களும் 5 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கற்சித்திரங்கள் இந்தக் குளத்தை சுற்றி ஒருங்கிணைப்பாளர்களால் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது தற்காலிகமானதுதான். எதிர்காலத்தில் நீண்ட இடைவேளைக்கு ஒரு கற்சிற்பம் நடப்படும்," இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் இயற்கை கல்வியை மேம்படுத்துவதற்காக கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிங்காநல்லூர் குளக்கரையில் கற்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, பல்லுயிர்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குளங்களைச் சுற்றிலும், மலர்கள் மற்றும் வனவிலங்குகளின் சிற்பங்களும் உண்மை தோற்றத்தைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் வனவிலங்குகளின் உடல் அமைப்புகளை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், 10 கற்சித்திரங்கள் மற்றும் 2 சிற்பங்களை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் மற்றும் சலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சார்பில் கே. சங்கர் ஆகியோர் இந்த சிற்பங்களை திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.
இது குறித்து குயிப் அமைப்பின் இயற்கை கல்வி அலுவலர் எஸ். வருண் கூறுகையில்,"தமிழத்தின் இயற்கை சின்னங்களான மாநிலம் மரம் (பனை), மாநில பறவை (மரகதப்புறா) மற்றும் மாநில விலங்கு (வரையாடு) ஆகியவற்றையின் வரலாற்றையும் போக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்சிற்பங்களும் 5 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கற்சித்திரங்கள் இந்தக் குளத்தை சுற்றி ஒருங்கிணைப்பாளர்களால் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது தற்காலிகமானதுதான். எதிர்காலத்தில் நீண்ட இடைவேளைக்கு ஒரு கற்சிற்பம் நடப்படும்," இவ்வாறு அவர் கூறினார்.