கோவை : வி.கே.கே., மேனன் சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நிச்சயம் மாற்று இடம் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.
கோவை : வி.கே.கே., மேனன் சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நிச்சயம் மாற்று இடம் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கோவை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சாலையோரத்தில் இருந்தவர்களுக்கு 60 ஆண்டுகளாகப் பட்டா, வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு கீரணத்தம், அறிவொளி நகர், வெள்ளலூர் பகுதிகளில் வீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் பல பேர் உள்ளதால் அடுத்தகட்டமாக வழங்கப்படும். சித்தாபுதூர் வி.கே.கே.,மேனன் சாலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், அந்த 54 பேருக்கு மாற்று இடம் நிச்சயமாக வழங்கப்படும்.

பேரூர் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் ஊடகங்களின் கேமராக்கள் தாக்கப்பட்டதாக தகவல் ஏதும் தனக்கு வரவில்லை. இருப்பினும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய ஊடகங்களுக்கு அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் தொலைக்காட்சிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியும்," என்றார்.