கோவை: ரயில்வே சுரங்கப்பாதை திறப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இருகூர் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: ரயில்வே சுரங்கப்பாதை திறப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இருகூர் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூறி பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 15 பேர் பலியாகிவிட்டனர்.
இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் குறைந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கவில்லை." என்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூறி பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 15 பேர் பலியாகிவிட்டனர்.
இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் குறைந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கவில்லை." என்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.