திருப்பூரில் தொழிலாளர்களுக்கு பெட்ரோல், டீசலுக்கு கடன் வழங்கும் தனியார் நிறுவனம்

திருப்பூர் : நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், திருப்பூர் தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு தனியார் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது.


திருப்பூர் : நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், திருப்பூர் தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு தனியார் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது. 



இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க கடன் வழங்கப்பட்டு வருவதை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனத்திற்கான எரிபொருட்கள் வாங்கவும் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் ஸ்ரீராம் எனும் நிறுவனம் ‘ஸ்மைலேஜ்’ எனும் திட்டம் மூலமாக எரிபொருட்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன்படி, ரூ. 100-க்கு எரிபொருட்கள் நிரப்புபவருக்கு மாதத்திற்கு ரூ.1.50 வட்டியாக வசூலிக்கப்படுகிறது. 



எரிபொருள் நிரப்பியதற்க்கான தொகையை விரைந்து செலுத்தும் போது நாட்கணக்கிலான வட்டி மட்டுமே பெறப்படும் என்றும், லிட்டருக்கு 85 காசுக்கான பெட்ரோல் வழங்கப்படும் என்றும், இதன்வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு லாபம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், முதல் மொபைல் மூலமாக பெறப்படும் (OTP) ஒரு முறை கடவுச் சொல் மூலம் பெறுவதால் எளிதில் எரிபொருள் நிரப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.



பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வை அனைவரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை சாதகமாக பயன்படுத்தும் நிறுவனங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வாகனங்கள் அதிகமாக வைத்திருக்கும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், எப்போதும் கையில் பணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், வழிப்பறிப் போன்ற சம்பவங்களில் இருந்து தப்பித்து, பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள உபயோகரமாக அமைவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...