கோவை : சர்வதேச கண்பார்வை தினத்தை முன்னிட்டு கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
கோவை : சர்வதேச கண்பார்வை தினத்தை முன்னிட்டு கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
சர்வதேச கண்பார்வை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடம் கண்தானம் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனை அம்மருத்துவமனையின் தலைவர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியானது, சித்ராவில் உள்ள மருத்துவமனையின் வளாகத்தில் தொடங்கி நேரு நகர் வரை சென்று முடிந்தது. பேரணியின் போது கண்தானம் மற்றும் கண் பார்வையைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்றனர்.
சர்வதேச கண்பார்வை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 11-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பொதுமக்களிடம் கண்தானம் அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனை அம்மருத்துவமனையின் தலைவர் எஸ்.கே. சுந்தரமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியானது, சித்ராவில் உள்ள மருத்துவமனையின் வளாகத்தில் தொடங்கி நேரு நகர் வரை சென்று முடிந்தது. பேரணியின் போது கண்தானம் மற்றும் கண் பார்வையைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்துச் சென்றனர்.