அன்னூர் அருகே தகாத உறவால் வாலிபர் அடித்துக் கொலை : போலீசார் விசாரணை

கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : அன்னூரில் மனைவியுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட வாலிபரை ஆத்திமடைந்த கணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூலூர் அடுத்த அரசூரைச் சேர்ந்த வாலிபர் மணிகண்டன். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அதே அரசூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி சத்யா என்பவருக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் சத்யாவின் கணவர் ரஞ்சித்திற்கு தெரிய வந்ததால், அவர் இருவரையும் கண்டித்ததுடன், இது குறித்து மணிகண்டன் மீது சூலூர் காவல்நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளார்.இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி, பின்னர் குடும்ப விவகாரம் என்பதால் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இருப்பினும், மணிகண்டன் மற்றும் சத்யா இருவரும் தொடர்ந்து பழகி வந்ததால், ஆத்திரமடைந்த ரஞ்சித் தனது நண்பர்கள் மூலமாக மணிகண்டனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். மணிகண்டனும் உள்ளூர்வாசி என்பதால், நண்பர்களை வைத்து மது குடிக்க நேற்று இரவு அன்னூர் அழைத்து வந்துள்ளனர். மது குடித்த பின்னர் போதையில் இருந்த மணிகண்டனை ரஞ்சித் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை தற்கொலையாக மாற்றும் நோக்கில் அன்னூர் அருகே பச்சாபாளையம் குளத்தில் சடலத்தை வீசி சென்றுள்ளனர். இதையடுத்து, அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். 

இந்த நிலையில், இன்று அந்த குளத்தின் வழியே சென்ற பொதுமக்கள் குளத்தில் சடலம் மிதப்பதைக் கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...