உதகையில் உள்ள இரு பங்களாக்கள் உள்பட ரூ. 54 கோடி மதிப்பிலான கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்

நீலகிரி : ஐ.என்.எக்ஸ். மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கிற்கு சொந்தமான உதகை பங்களாக்கள் உள்பட ரூ. 54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

நீலகிரி : ஐ.என்.எக்ஸ். மீடியா மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கிற்கு சொந்தமான உதகை பங்களாக்கள் உள்பட ரூ. 54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. 

மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களான பீட்டர் முகர்ஜியும், அவரது மனைவி இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். கடந்த 2007-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை அதிகரிப்பதற்காக அன்னிய முதலீடுகள் பெற முடிவு செய்தனர்.

அந்த வகையில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை விற்றதாகத் தெரிகிறது.



வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமானால் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் செல்வாக்கை பயன்படுத்தி, அந்த நிறுவனத்திற்கு கணிசமான செலவில் தடையில்லா சான்றை கார்த்தி பெற்றுக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

இது தொடர்பாகவும், அமலாக்கத்துறையும், சி.பி.ஐ. அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இருப்பினும், இந்த வழக்கில் இரண்டு பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கார்த்திக்கிற்கு சொந்தமான கொடைக்கானல் காட்டேஜ், உதகையில் இரண்டு பங்களாக்கள், லண்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.54 கோடியாகும். மேலும், ரூ.90 லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கார்த்தி, ஐ.என்எக்ஸ். நிறுவனத்தின் இந்திராணி முகர்ஜி, பீட்டரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...