மரத்தடியில் நின்று செல்போனில் பேசியவர் இடி தாக்கி பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா(25). இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் நேற்று வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்ட பின்னர், இரு சக்கர வாகனத்தில் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பரமசிவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்து போது திடீரென கனமழை பெய்ததால், அருகில் இருந்த மரத்தடியில் நின்றுகொண்டு தனது செல்போனில் பேசினார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில், குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் குருமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...