திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா(25). இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் நேற்று வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்ட பின்னர், இரு சக்கர வாகனத்தில் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பரமசிவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்து போது திடீரென கனமழை பெய்ததால், அருகில் இருந்த மரத்தடியில் நின்றுகொண்டு தனது செல்போனில் பேசினார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில், குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் குருமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா(25). இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் நேற்று வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்ட பின்னர், இரு சக்கர வாகனத்தில் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
பரமசிவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்து போது திடீரென கனமழை பெய்ததால், அருகில் இருந்த மரத்தடியில் நின்றுகொண்டு தனது செல்போனில் பேசினார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில், குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் குருமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.