கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மத போதகர் மோகன் சி.லாசரஸ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவ மத போதகரான இவர் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்வது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், ஜெபக்கூட்டங்களில் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களிலும், விஷ்வ ஹிந்த் பரிஷத் நிர்வாகி மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
153 ஏ-இரு மதங்கள் இடையே விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், 295-ஏ மதம் தொடர்பான குற்றங்களைப் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை கைது செய்ய அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மத போதகர் மோகன் சி.லாசரஸ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவ மத போதகரான இவர் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்வது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
மேலும், ஜெபக்கூட்டங்களில் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களிலும், விஷ்வ ஹிந்த் பரிஷத் நிர்வாகி மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
153 ஏ-இரு மதங்கள் இடையே விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், 295-ஏ மதம் தொடர்பான குற்றங்களைப் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை கைது செய்ய அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.