இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம்: கோவையில் கிருஸ்தவ மத போதகர் மீது வழக்குப்பதிவு

கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மத போதகர் மோகன் சி.லாசரஸ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவ மத போதகரான இவர் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்வது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், ஜெபக்கூட்டங்களில் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களிலும், விஷ்வ ஹிந்த் பரிஷத் நிர்வாகி மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

153 ஏ-இரு மதங்கள் இடையே விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், 295-ஏ மதம் தொடர்பான குற்றங்களைப் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை கைது செய்ய அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...