கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பதி பழங்குடிப் பகுதியில் உள்ள மோடம்பதி கிராமத்தைச் சேர்ந்த என். வெள்ளிங்கிரி (40), பி. அய்யப்பன் (50) ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், எட்டிமடை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் அதனைப் பார்த்து, இருவரின் சடலங்களில் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, உயிரிழந்த இருவரும் யானை தாக்கி உயிரிழந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என கே.ஜி. சாவடி போலீசார் கூறியுள்ளனர்.
அய்யம்பதி பழங்குடிப் பகுதியில் உள்ள மோடம்பதி கிராமத்தைச் சேர்ந்த என். வெள்ளிங்கிரி (40), பி. அய்யப்பன் (50) ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், எட்டிமடை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் அதனைப் பார்த்து, இருவரின் சடலங்களில் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, உயிரிழந்த இருவரும் யானை தாக்கி உயிரிழந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என கே.ஜி. சாவடி போலீசார் கூறியுள்ளனர்.