மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுப்பு : யானை தாக்கியதில் உயிரிழந்தனரா என சந்தேகம்

கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : மதுக்கரை வனப்பகுதியில் இரு ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் யானை தாக்கியதில் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அய்யம்பதி பழங்குடிப் பகுதியில் உள்ள மோடம்பதி கிராமத்தைச் சேர்ந்த என். வெள்ளிங்கிரி (40), பி. அய்யப்பன் (50) ஆகியோர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வனப்பகுதிக்குள் விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், எட்டிமடை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ரோந்து சென்ற வனத்துறையினர் அதனைப் பார்த்து, இருவரின் சடலங்களில் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இதனிடையே, உயிரிழந்த இருவரும் யானை தாக்கி உயிரிழந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து தெரிய வரும் என கே.ஜி. சாவடி போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...