கோவை : இந்து பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புப்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் தனது மகனை இண்டர்போல் உதவியுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பதைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஷாஜகான் என்பவர் மனு அளித்துள்ளார்.
கோவை : இந்து பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புப்படுத்தி வெளிநாட்டில் இருக்கும் தனது மகனை இண்டர்போல் உதவியுடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருப்பதைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஷாஜகான் என்பவர் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கே.கே.,புதூரை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் முகம்மது ரபிக்குல் ஹசன், மர அறுவை தொழில் செய்து வந்தார். தொழில் இலாபம் இல்லாத காரணத்தால் ஓமன் நாட்டிற்கு சென்று வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக எனது மகன் மீது சி.பி.சி.ஐ.டி., விசாரணை மேற்கொண்டது. அதில், இவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை நிறுத்தி கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஓமனில் உள்ள தனது மகனின் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தனது மகனை விசாரணைக்கு அழைக்காமலேயே ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலம், இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஓமனில் இருக்கும் தனது மகனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, தவறான தகவல்களைக் கொண்டு தனது மகனை கைது செய்ய என்.ஐ.ஏ., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கே.கே.,புதூரை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் முகம்மது ரபிக்குல் ஹசன், மர அறுவை தொழில் செய்து வந்தார். தொழில் இலாபம் இல்லாத காரணத்தால் ஓமன் நாட்டிற்கு சென்று வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில், இந்து பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக எனது மகன் மீது சி.பி.சி.ஐ.டி., விசாரணை மேற்கொண்டது. அதில், இவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை நிறுத்தி கொண்டனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஓமனில் உள்ள தனது மகனின் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தனது மகனை விசாரணைக்கு அழைக்காமலேயே ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலம், இண்டர்போல் போலீஸ் உதவியுடன் ஓமனில் இருக்கும் தனது மகனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, தவறான தகவல்களைக் கொண்டு தனது மகனை கைது செய்ய என்.ஐ.ஏ., மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.