நீலகிரி: குன்னுாரை அடுத்த காட்டேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டு, அங்கிருந்த நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி வியாபாரிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: குன்னுாரை அடுத்த காட்டேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டு, அங்கிருந்த நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி வியாபாரிகள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி சந்திப்பிலிருந்து மஞ்சூர், கொலக் கொம்பை, ஆர்செடின் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது.
காட்டேரி சந்திப்பிலிருந்து செல்லும் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 22 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலை துறை மூலம் பல முறை நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் கடைகள் காலி செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாலை நேரம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாரிஜாதம் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றனர். அவர்கள் பாதுகாப்பிற்காக குன்னூர் நகர போலீசார் குவிக்கப்பட்டனர்.
உரிமையாளர்கள் தங்கள் உடமைகளை எடுத்துச்சென்றவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளின் மத்தியில் நகராட்சி கட்டிடத்தில் ரேஷன் கடை இருந்தது. நகராட்சி கட்டடம் என்பதால் கட்டிடத்தை இடிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
இருப்பினும் அங்கு நகராட்சி அதிகாரிகளோ அல்லது அலுவலர்களோ வரவில்லை. இதனைத்தொடர்ந்து, முறையாக நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கட்டிடத்தை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.
ஆனால் இந்த முடிவிற்கு கடைக்காரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்று வியாபாரிகள், திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து, நகராட்சி கட்டிடம் இப்போதே இடிக்கப்படும் என்று கூறி பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நகராட்சி கட்டிடத்தை இடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அமைதியானார்கள்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி சந்திப்பிலிருந்து மஞ்சூர், கொலக் கொம்பை, ஆர்செடின் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது.
காட்டேரி சந்திப்பிலிருந்து செல்லும் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 22 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலை துறை மூலம் பல முறை நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் கடைகள் காலி செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாலை நேரம் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாரிஜாதம் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றனர். அவர்கள் பாதுகாப்பிற்காக குன்னூர் நகர போலீசார் குவிக்கப்பட்டனர்.
உரிமையாளர்கள் தங்கள் உடமைகளை எடுத்துச்சென்றவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளின் மத்தியில் நகராட்சி கட்டிடத்தில் ரேஷன் கடை இருந்தது. நகராட்சி கட்டடம் என்பதால் கட்டிடத்தை இடிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நகராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.
இருப்பினும் அங்கு நகராட்சி அதிகாரிகளோ அல்லது அலுவலர்களோ வரவில்லை. இதனைத்தொடர்ந்து, முறையாக நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கட்டிடத்தை இடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர்.
ஆனால் இந்த முடிவிற்கு கடைக்காரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்று வியாபாரிகள், திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து, நகராட்சி கட்டிடம் இப்போதே இடிக்கப்படும் என்று கூறி பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து நகராட்சி கட்டிடத்தை இடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அமைதியானார்கள்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.