தொழிலதிபர் வீட்டில் இருந்து தொன்மையான 89 சிலைகள் பறிமுதல் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

சென்னை: தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலை சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.


சென்னை: தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட சிலை சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். 

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொன்மையான சிலைகளை விற்க யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் தனது வெட்டில் 100 ஆண்டுகள் பழமையான சிலைகளை இந்த தொழிலதிபர் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது வரை சிலைகள் மற்றும், கல்லில் செதுக்கப்பட்ட பொருட்கள் என 89 தொன்மையான பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். இந்த சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட தொன்மையான சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க இடமில்லை என்கின்றனர். 

நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். கைப்பற்றப்பட்ட சிலைகளை சொந்த செலவில் தான் எடுத்துச் செல்லவேண்டி இருக்கிறது. அந்த சிலைகளை கும்பகோணம் கொண்டு செல்ல பணம் இல்லை. இதனை காவல்துறை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இது தொடர்பாக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுத உள்ளேன்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...