3 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவடைந்த 50 வயது பெண்

கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது மூளைச்சாவடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது மூளைச்சாவடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 50 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மனைவி இந்திராணி (50). இவர் கடந்த 19-ம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதைத் தொடர்ந்து, உடனடியாக அவர் கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த நேற்று அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது கணவர் முத்துசாமி, மனைவி இந்திராணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது. 

இது குறித்து கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிசாமி கூறுகையில், "மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால். அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர், உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணியின் குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...