நீலகிரி: உதகையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "70 ஆண்டுகளாக பராசக்தி என்ற திரைப்படம் இன்றும் உயிரோடு இருக்கிறது என்றார்.
நீலகிரி: உதகையில் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், "70 ஆண்டுகளாக பராசக்தி என்ற திரைப்படம் இன்றும் உயிரோடு இருக்கிறது என்றார்.
கலைஞரை பற்றி உருக்கமாக பேசிய திருச்சி சிவா, 'காகிதம் ஓடம்' என்ற பாடலை பாடி கண்கலங்கினார். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழகத்தில் ஆளுக்கொரு சட்டமா? என்ற கேள்வி எழுப்பினார்.

சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் கைது செய்கின்றனர். சிலர் மீது பல வழக்குகள் இருந்த போதிலும். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்காத போதிலும் அவர்களை கைது செய்யாமல், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து வரும் கையாளாகாத தமிழக அரசு என சாடி பேசினார்.
எச்.ராஜா பொறுப்பற்ற முறையிலும், கலவரம் உருவாக்கும் வகையிலும் பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தில் உள்ள கையாளாகாத அரசு அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம், ஒரு கலாச்சாரம் என மாற்ற நினைக்கிற மத்திய அரசின் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வருவதாக சுட்டிக் காட்டினார்.

இந்திய பிரதமர் யார் என்பதை அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் முடிவு செய்யும் காலம் வரும் என்றும், எதிர்க் கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினர் எதிர்க் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என பாஜக.,வினர் கர்நாடக ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைப் பார்த்தே தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
தேர்தல் வரும் போது, தமிழகத்தில் உள்ள ஊழல் அரசுக்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தான், இழந்ததை மீண்டும் பெற முடியும்." என்றார்.
கலைஞரை பற்றி உருக்கமாக பேசிய திருச்சி சிவா, 'காகிதம் ஓடம்' என்ற பாடலை பாடி கண்கலங்கினார். பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், தமிழகத்தில் ஆளுக்கொரு சட்டமா? என்ற கேள்வி எழுப்பினார்.

சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தவுடன் கைது செய்கின்றனர். சிலர் மீது பல வழக்குகள் இருந்த போதிலும். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்காத போதிலும் அவர்களை கைது செய்யாமல், அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து வரும் கையாளாகாத தமிழக அரசு என சாடி பேசினார்.
எச்.ராஜா பொறுப்பற்ற முறையிலும், கலவரம் உருவாக்கும் வகையிலும் பேசி வருகிறார். ஆனால், தமிழகத்தில் உள்ள கையாளாகாத அரசு அவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம், ஒரு இனம், ஒரு கலாச்சாரம் என மாற்ற நினைக்கிற மத்திய அரசின் இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் கூறி வருவதாக சுட்டிக் காட்டினார்.

இந்திய பிரதமர் யார் என்பதை அறிவாலயத்தில் இருந்து ஸ்டாலின் முடிவு செய்யும் காலம் வரும் என்றும், எதிர்க் கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியினர் எதிர்க் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் என பாஜக.,வினர் கர்நாடக ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அதனைப் பார்த்தே தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சிக்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
தேர்தல் வரும் போது, தமிழகத்தில் உள்ள ஊழல் அரசுக்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தான், இழந்ததை மீண்டும் பெற முடியும்." என்றார்.