நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
கோத்தகிரி கூட்டடா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் சாமிதாஸ் (63). இன்று காலை வீட்டின் வெளியே நாய் குரைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வெளியே சென்றார். அப்போது வெளியில் குட்டியுடன் யானை ஒன்று வீட்டின் முன் கொய்யா பழத்தைத் தின்று கொண்டிருந்தது.
இதனை கவனிக்காத சாமிதாஸ் யானை அருகே சென்றார். அப்போது திடீரென அவரை யானை தாக்கியது. மேலும், காலில் மிதித்தது. இதில் சாமிதாஸ் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாமிதாசின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி கூட்டடா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் சாமிதாஸ் (63). இன்று காலை வீட்டின் வெளியே நாய் குரைத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வெளியே சென்றார். அப்போது வெளியில் குட்டியுடன் யானை ஒன்று வீட்டின் முன் கொய்யா பழத்தைத் தின்று கொண்டிருந்தது.
இதனை கவனிக்காத சாமிதாஸ் யானை அருகே சென்றார். அப்போது திடீரென அவரை யானை தாக்கியது. மேலும், காலில் மிதித்தது. இதில் சாமிதாஸ் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சாமிதாசின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.