கோவை : கீரணத்தம் ஊராட்சியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிட மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்களுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : கீரணத்தம் ஊராட்சியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டிட மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றவர்களுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் நகர் மற்றும் குறிஞ்சி நகர் அருகில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சாயத்திற்கு சொந்தமான பொது இடம் உள்ளது. இங்கு மருத்துவக் கழிவு, மாமிசக் கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை சமூகவிரோதிகள் சிலர் தொடர்ந்து கொட்டி வந்தனர்.
இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ஊராட்சி அதிகரிகளுக்கு தகவல் அளித்த குடியிருப்புவாசிகள், லாரிகளில் வந்து கழிவுகளை கொட்டிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.
இதனையடுத்து, கழிவுகள் கொட்டப்படும் பொது இடத்தை ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், இன்று காலை கோழிக்கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்ட வந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக கீரணத்தம் ஊராட்சியின் தனி அலுவலர் பி.சுந்தரியின் உத்தரவின் பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். முத்துராஜூ மற்றும் ஊராட்சி செயலாளர் பாலசுந்திரம் ஆகியோர் லாரி உரிமையாளருக்கு ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.

மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த 10 டன்னிற்கும் அதிகமான குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கீரணத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்ணாரி அம்மன் நகர் மற்றும் குறிஞ்சி நகர் அருகில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட பஞ்சாயத்திற்கு சொந்தமான பொது இடம் உள்ளது. இங்கு மருத்துவக் கழிவு, மாமிசக் கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை சமூகவிரோதிகள் சிலர் தொடர்ந்து கொட்டி வந்தனர்.
இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து ஊராட்சி அதிகரிகளுக்கு தகவல் அளித்த குடியிருப்புவாசிகள், லாரிகளில் வந்து கழிவுகளை கொட்டிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டனர்.
இதனையடுத்து, கழிவுகள் கொட்டப்படும் பொது இடத்தை ஊராட்சி அலுவலர்கள் கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், இன்று காலை கோழிக்கழிவு மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்ட வந்த ராஜ் என்பவருக்கு சொந்தமான லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர். பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காக கீரணத்தம் ஊராட்சியின் தனி அலுவலர் பி.சுந்தரியின் உத்தரவின் பேரில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். முத்துராஜூ மற்றும் ஊராட்சி செயலாளர் பாலசுந்திரம் ஆகியோர் லாரி உரிமையாளருக்கு ரூ. 20,000 அபராதம் விதித்தனர்.

மேலும், அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த 10 டன்னிற்கும் அதிகமான குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.