கோவையில் மளிகை கடைக்கு தீவைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிவானந்தா காலனியில் உள்ள காந்திநகர் பகுதியில் அசன் கோயல் என்பவரது மகன் சையத் அலவி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரின் கடைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சுமார் 11:45 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். 

இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் மூலம் கடைக்கு தீ வைத்தவர் சூர்யா என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பல்வேறு குற்றங்களில் சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்த உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...