கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மளிகைக் கடைக்கு தீ வைத்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிவானந்தா காலனியில் உள்ள காந்திநகர் பகுதியில் அசன் கோயல் என்பவரது மகன் சையத் அலவி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரின் கடைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சுமார் 11:45 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர்.
இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் மூலம் கடைக்கு தீ வைத்தவர் சூர்யா என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பல்வேறு குற்றங்களில் சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
சிவானந்தா காலனியில் உள்ள காந்திநகர் பகுதியில் அசன் கோயல் என்பவரது மகன் சையத் அலவி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரின் கடைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி சுமார் 11:45 மணியளவில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர்.
இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரது மகன் சூர்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் மூலம் கடைக்கு தீ வைத்தவர் சூர்யா என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், பல்வேறு குற்றங்களில் சூர்யாவுக்கு தொடர்பு இருப்பதாலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த உத்தரவு நகல் மத்திய சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.