கோவை : தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவருக்கு, தலா 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவருக்கு, தலா 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட டாடாபாத் 3-வது வீதியில் 55 வயதான சுஜாதா என்ற பெண் அணிந்திருந்த 1.5 பவுன் நகையை பறித்த வழக்கு மற்றும் சேவா நகரில் பேராசிரியர் பெரியநாயகி என்பவர் அணிந்திருந்த 5.5 பவுன் நகையை பறித்து காயம் ஏற்படுத்திய வழக்கு என இரு வழக்கிலும் கோவையை சேர்ந்த ஆறுமுகம் (25), சேகர் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது.
இன்று வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம், சேகர் மீது கோவையில் மற்ற காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட டாடாபாத் 3-வது வீதியில் 55 வயதான சுஜாதா என்ற பெண் அணிந்திருந்த 1.5 பவுன் நகையை பறித்த வழக்கு மற்றும் சேவா நகரில் பேராசிரியர் பெரியநாயகி என்பவர் அணிந்திருந்த 5.5 பவுன் நகையை பறித்து காயம் ஏற்படுத்திய வழக்கு என இரு வழக்கிலும் கோவையை சேர்ந்த ஆறுமுகம் (25), சேகர் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது.
இன்று வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம், சேகர் மீது கோவையில் மற்ற காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.