நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது - டிடிவி.தினகரன் கடும் தாக்கு

சென்னை: நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது என்றும், இன்னும் பாதாளத்திற்கு தான் செல்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னை: நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது என்றும், இன்னும் பாதாளத்திற்கு தான் செல்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பேசியதாவது:-

நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான். ஒருவர் தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மாற்று மதத்தவரை இழிவுபடுத்தி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எச்.ராஜா தானது கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியாத விரக்தியில் அவ்வாறு பேசி வருகிறார். தற்போது உயர் நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

இப்படியான மன நிலையை உடையவர் தனது கட்சியை வளர்க்க முடியாது. ஏற்கனவே நோட்டாவுடன் போட்டி போடுகிறது அந்த கட்சி. இப்படியே போனால், கட்சி இன்னும் பாதாளத்திற்கு தான் செல்லும். மதவெறியைத் தூண்டுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.

தற்போதைய அரசு மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது. நீதிமன்றம் கண்டித்துவிடும் என்று தான் தற்போது எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயத்தில் இருக்கின்றனர்.

என்று அவர் பேசினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...