கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ரோபோ விநாயகர்கள் இசைக்கருவிகளை வாசித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவை : கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜை நிகழ்ச்சியில் ரோபோ விநாயகர்கள் இசைக்கருவிகளை வாசித்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு நூதன முறையிலான வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோவை சாய்பாபா காலனி அண்ணா நகர் பகுதியில் உள்ள விவேகானந்தர் இளைஞர் பொதுநல மன்றம் சார்பில் 21-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. 8 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக விநாயகர்,முருகன் மற்றும் அம்மனுக்கு 158 விளக்கு பூஜை நடைபெற்றது. விழக்கு பூஜையின் ஒரு பகுதியாக 5 ரோபோ விநாயகர்கள் அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரோபோ விநாயகர்கள் கீபோர்ட், கிட்டார், டிரம்பெட், வயலின் மற்றும் டிரம்ஸ்கள் இசைத்தது பொதுமக்களையும், பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல, பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் விளக்கு பூஜைகளும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.
இன்று மாலை பெரும்பாலான இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குளங்களில் கரைக்கப்பட உள்ளன. இதனையொட்டி, ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.மேலும், சில இடங்களில் போக்குவரத்து மாற்றமும் செய்யபட்டு உள்ளது.