கோவை : சிறுவாணி அருகே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சாலையோரங்களில் இல்லாத மரங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சிறுவாணி அருகே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சாலையோரங்களில் இல்லாத மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு உயரங்களுடைய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளனர். இந்தப் பண்டிகை நாட்களின் போது விநாயகர் சிலைகள் வீதியுலா கொண்டு செல்லப்படும். மேலும், திங்கட்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட இருக்கிறது.

விநாயகர் சிலைகள் திருவீதியுலாவிற்கோ, விசர்ஜனத்திற்கோ எடுத்துச் செல்லும் வகையில், சிறுவாணி சாலையில் உள்ள சாலையோர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நல்லூர்வயலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் என்ற பெயரில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத மரங்களையும், கிளைகளையும் நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் வெட்டியுள்ளனர்.
