கோவை குண்டு வெடிப்பு வழக்கு: 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் நோகு என்ற மாங்காவு ரஷீத். இவர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரை சுமார் இருபதாண்டு காலமாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவர் மீது பெரியகடை வீதி பி1 காவல் நிலையத்தில், வெடி பொருள் உபகரணச்சட்டம் 1908, பிரிவு 25(1-பி)(ஏ) உட்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடப்பட்டு வந்த குற்றவாளியான இவர், வெளிநாடுகளில் சுற்றி தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குற்றவாளி ரஷீத் டெல்லியில் இருந்து சென்னை வரும் போது சி.பி.சி.ஐ.டி சிறப்பு படையினர் துப்பாக்கி முனையில் அவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து அவரை கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...