கோவை : குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தருமாறு அமுதசுரபி திருநங்கைகள் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கி தருமாறு அமுதசுரபி திருநங்கைகள் நல சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தங்களது நலச்சங்கத்தில் 128 பேர் உறுப்பினராக உள்ளதாகவும், முதல் கட்டமாக 32 பேருக்கு செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த ஓராண்டாக வீடுகள் ஒதுக்கி தருமாறு வலியுறுத்தி வருகிறோம். கடந்த மாதம் தங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் தபால் ஒன்று கிடைத்தது. அதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை கடிதம் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து ஆவண செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் திருநங்கைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டதைப் போல, தங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார், இவ்வாறு அவர்கள் கூறினர்.
தங்களது நலச்சங்கத்தில் 128 பேர் உறுப்பினராக உள்ளதாகவும், முதல் கட்டமாக 32 பேருக்கு செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :- கடந்த ஓராண்டாக வீடுகள் ஒதுக்கி தருமாறு வலியுறுத்தி வருகிறோம். கடந்த மாதம் தங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் தபால் ஒன்று கிடைத்தது. அதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை கடிதம் பெற்று வருமாறு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து ஆவண செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் திருநங்கைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டதைப் போல, தங்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார், இவ்வாறு அவர்கள் கூறினர்.