திருப்பூர்: திருப்பூர்-பல்லடம் சாலை டி.கே.டி மில் பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து பணம் பரிப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர்: திருப்பூர்-பல்லடம் சாலை டி.கே.டி மில் பகுதியில் தனியாக வருபவர்களை வழிமறித்து பணம் பரிப்பதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதியில் சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை வழி மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததைக் கண்ட போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் அருள்புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), முருகானந்தம் (23) மற்றும் பல்லடத்தை சேர்ந்த முரசொலி மாறன் (23) என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதியில் சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை வழி மறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், தங்களை போலீசார் என்று கூறிக்கொண்டு பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததைக் கண்ட போலீசார், மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் அருள்புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (24), முருகானந்தம் (23) மற்றும் பல்லடத்தை சேர்ந்த முரசொலி மாறன் (23) என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.3 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.