கோவை: பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை கூறி வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எலி காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்துகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கேரள எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழு மூலம் சோதனைகள் செய்து வருகின்றனர். எலி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக கேரள எல்லையில் கால்நடைகளுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. கால் நடைகளை வைத்து இருப்போர் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திற்குள் வரும் கால்நடைகளை பரிசோதனை செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன." என்றார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும், ஒவ்வொரு துறை அமைச்சரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை கூறி வருகின்றனர்." என்றார்.
கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எலி காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவுவதை தடுக்கும் பொருட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான மருந்துகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தமிழக கேரள எல்லை பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழு மூலம் சோதனைகள் செய்து வருகின்றனர். எலி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக கேரள எல்லையில் கால்நடைகளுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. கால் நடைகளை வைத்து இருப்போர் சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திற்குள் வரும் கால்நடைகளை பரிசோதனை செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன." என்றார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மேலும், ஒவ்வொரு துறை அமைச்சரும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை கூறி வருகின்றனர்." என்றார்.