கோவை: உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.
கோவை: உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக கோவை மாநகர போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலுதவி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உட்பட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) முதலுதவி அளிக்க முறையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோட்டரி சங்கத்தின் சார்பாக கோவை மாநகர போக்குவரத்து துறை துணை ஆணையாளர் சுஜித்குமார் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதலுதவி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உட்பட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.