கோவை: வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கைதான இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை: வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு கைதான இளைஞரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பரவது மகன் அருண் (23). இவர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் போது, அருண் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கத்தியை காட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகன வழிப்பறி செய்தும், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்து தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அருணை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.
ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் என்பரவது மகன் அருண் (23). இவர் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் போது, அருண் மீது செல்வபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே கத்தியை காட்டி செல்போன் மற்றும் இருசக்கர வாகன வழிப்பறி செய்தும், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்து தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அருணை குண்டர் சட்டத்தில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.