கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து : துரிதமாக செயல்பட்டு அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கோவை: கோவையில் கூட் ஷெட் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் கூட் ஷெட் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவருக்கு சொந்தமான ஃபோர்ட் காரை ஓட்டுநர் திருமலைசாமி என்பவர் பெண்கள் மூன்று பேருடன் காரை ஓட்டி வந்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் இருந்து பெரியகடை வீதிக்கு செல்ல கூட்ஷெட் ரோடு வழியாக வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதையடுத்து, ஓட்டுநர் உட்பட காரில் இருந்த பெண்களும் காரை விட்டு வெளியேறினர். 

இதைத்தொடர்ந்து, சிறுது நேரத்தில் கார் தீ பற்றி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர். அதிக வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு புகை மூட்டம் சூழ்ந்ததால் அவ்வழியே வந்த வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...