திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிரியர் கடுமையாக தாக்கியதைக் கண்டித்து அவர்களது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தில் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாணவிகளை ஆசிரியை விஜயா என்பவர் குச்சியால் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், கைகளில் காயமடைந்த மாணவிகள் மாலையில் வீட்டிற்கு சென்ற பிறகும் வலியால் துடித்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஆசிரியர் விஜயா குச்சியால் தாக்கியதை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரத்த காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கிய ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பெற்றோர் மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

தாராபுரத்தில் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாணவிகளை ஆசிரியை விஜயா என்பவர் குச்சியால் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், கைகளில் காயமடைந்த மாணவிகள் மாலையில் வீட்டிற்கு சென்ற பிறகும் வலியால் துடித்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கேட்டதற்கு ஆசிரியர் விஜயா குச்சியால் தாக்கியதை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரத்த காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கிய ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பெற்றோர் மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.