கொங்கு மக்கள் முன்னனி பிரமுகருக்கு கொலை மிரட்டல் : எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

கோவை: கொங்கு மக்கள் முன்னனி பிரமுகருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் தமிழரசன் மீது கோவை குனியமுத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: கொங்கு மக்கள் முன்னனி பிரமுகருக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் தமிழரசன் மீது கோவை குனியமுத்தூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை குனியமுத்தூர் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கொங்கு மக்கள் முன்னனியில் மாவட்ட செயலாளராக உள்ளார். கடந்த 3-ம் தேதி பாலசுப்பிரமணியம் என்பவரது தொலைபேசியில் இருந்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தனியரசின் உதவியாளர் தமிழரசன் பார்த்திபனை என்பவரை அழைத்து கடுமையான வார்த்தைகளில் திட்டியதாகவும் , தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரங்களோடு பார்த்திபன் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த தனியரசின் உதவியாளர் தமிழரசன் மீது 294/b மற்றும் 507 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனது இயக்க தலைவர் ஆறுமுகத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...