திருப்பூர் : உடுமலை வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர் : உடுமலை வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோட்டார் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுநர்களிடம் உடனடி அபராதம் அதிக அளவு வசூலிப்பதாகவும், செய்யாத தவறுகளுக்கும் வழக்குப் பதிவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் 50-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய விடுகின்றனர். எனவே, தங்களது ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களை பாதிக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுநர்களிடம் உடனடி அபராதம் அதிக அளவு வசூலிப்பதாகவும், செய்யாத தவறுகளுக்கும் வழக்குப் பதிவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாடகை வாகன ஓட்டுநர்களின் உரிமங்களைப் பறிமுதல் செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழியிடம் 50-க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் ஓட்டுநர் உரிமத்தைப் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைய விடுகின்றனர். எனவே, தங்களது ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.