கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: முறையற்ற பணியிட மாறுதல்கள் கண்டித்து கோவையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் நடப்பு கல்வியாண்டில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி பணியிட மாறுதலைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரி வாயில் முன்பும் வாயில் முழக்கப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி அரசு இந்த போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்றும், இணை இயக்குநர்கள் நியமனத்தில் பணிமூப்பு பின்பற்றப் படவேண்டும் என தெரிவித்தனர்.
கடந்த மாதம் 26-ம் தேதி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் நடப்பு கல்வியாண்டில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து பணியிட மாறுதல்களைக் கைவிட வேண்டும், கழக பொறுப்பாளர்கள் மீது விசாரணையின்றி பணியிட மாறுதலைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரி வாயில் முன்பும் வாயில் முழக்கப் போராட்டம் நடத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலை கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி அரசு இந்த போக்கினை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், வரும் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும் என்றும், இணை இயக்குநர்கள் நியமனத்தில் பணிமூப்பு பின்பற்றப் படவேண்டும் என தெரிவித்தனர்.