எலி காய்ச்சல் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் : கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தகவல்

கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.


கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து கோவை பந்தய சாலையில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது :- லெப்டோஸ்பைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் நோயானது ஸ்பைரோகீட் என்னும் பாக்டீரியா வகையைச் சேர்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்குகளை தொற்றுகிறது.

இது நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் நீர், நிலம் மற்றும் உணவுப் பொருட்களில் பரவும்போது இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. எலி காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். 

இந்த வகை காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் இல்லை. தண்ணீர் மற்றும் உணவுகள் மூலமாகத்தான் அதிகம் உண்டாகிறது. இந்த நோய்க் கிருமிகள் உடலில் தாக்கும்போது பல்வேறு அறிகுறிகள் உண்டாகிறது. குறிப்பாக, சிவந்த கண்கள், தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பல அறிகுறிகள் உண்டாகிறது.

பொதுமக்களில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் வரும் போது மருத்துகடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணுவதை நிறுத்த வேண்டும். 

இந்த எலிக் காய்ச்சல் நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும், நமது கோவை அரசு மருத்துவமனையில் உள்ளது. எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை.

எலி காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனே தெரிவிக்க சொல்லி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரள, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள 18 கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...