செண்டுமல்லி விலை கடும் சரிவு : கவலையில் மேட்டுப்பாளையம் விவசாயிகள்

கோவை: இவ்வாண்டு பெய்த சீரான மழை காரணமாக செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி மலர் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோவை: இவ்வாண்டு பெய்த சீரான மழை காரணமாக செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அதிகரித்தும் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதி மலர் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் உதிரிப் பூக்கள் பெரும்பாலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் முக்கியமானது செண்டுமல்லி. இச்செடியின் ஆயுள் காலம் 160 நாட்கள் என்ற நிலையில், இரண்டாவது மாதத்தில் இருந்து ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை பூக்கள் பூக்கும்.



கேரளாவின் ஓணம் திருவிழா காலங்களில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகும். மற்ற காலகட்டத்தில் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனையாகும். மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை, கரும்பு, மஞ்சளுக்கு அடுத்தபடியாக செண்டுமல்லி சாகுபடியே பெருமளவு செய்யப்படும் நிலையில், இவ்வாண்டு இப்பகுதிகளில் முன் கூட்டியே பெய்த போதுமான மழை காரணமாக இதன் விளைச்சல் அதிகரித்தது.

செண்டுமல்லி தோட்டங்களில் ஊடு பயிராக கோழிக்கொண்டை பூக்களையும் நடவு செய்திருந்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை காரணமாக அம்மாநிலமே நிலை குலைந்து போன நிலையில், இங்கிருந்து கேரளாவிற்கு செல்லும் செண்டுமல்லி பூக்களின் வரத்து முற்றிலுமாக தடைபட்டது.

கேரள வியாபாரிகளின் வருகை தடைபட்ட காரணத்தினால் இதன் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாயாக சரிந்து விட்டது. இதனால் போட்ட முதலீடு கூட கிடைக்காமல் விவசாயிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கேரள வியாபாரிகளே இங்கிருந்து பூக்களை வாங்கி அம்மாநில பயன்பாட்டிற்கு போக வளைகுடா நாடுகளுக்கு கால்நடை தீவனங்களுக்கும், நிறம் ஏற்றும் பயன்பாட்டிற்கு செண்டுமல்லியை அனுப்பி வந்தனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த சீரான மழை மலர்களின் விளைச்சலுக்கு பெருமளவு உதவிய நிலையில் இதனை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தை மழை புரட்டி போட்டதால் மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...