கோத்தகிரி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

கோத்தகிரி அருகே உள்ள மூனு ரோடு பகுதியானது நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று 7 வயது மதிக்கக்தக்க ஆண் காட்டு யானை ஒன்று, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழித்தவறி மூனுரோடு பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கும், இங்குமாக அழைந்த அந்த யானை தேயிலைத் தோட்டத்தின் முட்புதரில் பதுங்கிக் கொண்டது. 

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...