நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் வழிதவறி புகுந்த ஒற்றைக் காட்டு யானையை சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பட்டாசுகளை வெடித்து காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள மூனு ரோடு பகுதியானது நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று 7 வயது மதிக்கக்தக்க ஆண் காட்டு யானை ஒன்று, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழித்தவறி மூனுரோடு பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கும், இங்குமாக அழைந்த அந்த யானை தேயிலைத் தோட்டத்தின் முட்புதரில் பதுங்கிக் கொண்டது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள மூனு ரோடு பகுதியானது நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகளவு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், இன்று 7 வயது மதிக்கக்தக்க ஆண் காட்டு யானை ஒன்று, தனது கூட்டத்திலிருந்து பிரிந்து வழித்தவறி மூனுரோடு பகுதி குடியிருப்புக்குள் நுழைந்தது. அங்கும், இங்குமாக அழைந்த அந்த யானை தேயிலைத் தோட்டத்தின் முட்புதரில் பதுங்கிக் கொண்டது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, ஒற்றை யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.