திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விற்கப்படும் விநாயகர் சிலைகளில் ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், அவிநாசி சாலை மற்றும் அவிநாசி சந்தை பகுதிகளில் வடமாநில மக்கள் விற்பனை செய்ய வைத்திருந்த விநாயகர் சிலையை இன்று ஆய்வு செய்தனர். அதில், நீரில் கரைக்கும் போது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இரண்டு இடங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விற்கப்படும் விநாயகர் சிலைகளில் ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், அவிநாசி சாலை மற்றும் அவிநாசி சந்தை பகுதிகளில் வடமாநில மக்கள் விற்பனை செய்ய வைத்திருந்த விநாயகர் சிலையை இன்று ஆய்வு செய்தனர். அதில், நீரில் கரைக்கும் போது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இரண்டு இடங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.