திருப்பூரில் விதிகளை மீறி ரசாயனத்தால் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக அரசு விதித்துள்ள விதிகளை மீறி, திருப்பூரில் ரசாயன நிறமிகளை கொண்டு உருவாக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் மீறி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக விற்கப்படும் விநாயகர் சிலைகளில் ரசாயன நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. திருப்பூர் வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் லாவண்யா தலைமையிலான அதிகாரிகள், அவிநாசி சாலை மற்றும் அவிநாசி சந்தை பகுதிகளில் வடமாநில மக்கள் விற்பனை செய்ய வைத்திருந்த விநாயகர் சிலையை இன்று ஆய்வு செய்தனர். அதில், நீரில் கரைக்கும் போது சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் ரசாயன நிறமிகள் கலந்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, இரண்டு இடங்களிலும் விற்பனைக்காக வைத்திருந்த 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...