நீலகிரி : கடைகளில் அதிகாரிகள் நடத்தும் தொடர் சோதனைகளைக் கண்டித்து கூடலூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
நீலகிரி : கடைகளில் அதிகாரிகள் நடத்தும் தொடர் சோதனைகளைக் கண்டித்து கூடலூரில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகர்புறங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளால், வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கூடலூரில் பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் தேவையில்லாத கெடுபிடிகளை விதிப்பதாகவும், தங்களால் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு தொடர்ந்து கெடுபிடி செய்வதாக குற்றம்சாட்டி அனைத்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என நகர்புறங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளால், வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கூடலூரில் பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் தேவையில்லாத கெடுபிடிகளை விதிப்பதாகவும், தங்களால் வியாபாரம் செய்ய முடியாத அளவிற்கு தொடர்ந்து கெடுபிடி செய்வதாக குற்றம்சாட்டி அனைத்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஊர்வலமாக கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.